எனது அதிகாரத்தில் ப.சிதம்பரம் எப்படி தலையிடலாம்?: பிரதமரிடம் ஜெயந்தி நடராஜன் புகார்

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீது மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நிதியமைச்சரானது முதல் அடுத்தடுத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்கி வரும் சிதம்பரம் தனது அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பெரிய அளவில் முதலீடுகளை கொண்ட திட்டங்களுக்கு மிக விரைவாக ஒப்புதல் அளிக்கும் வகையில் நிதியமைச்சகத்தின் கீழ் தேசிய முதலீட்டு வாரியம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
பிற அமைச்சகங்களிடமிருந்து திட்டங்களுக்கு மிக விரைவான ஒப்புதலைப் பெறுவது இந்த வாரியத்தின் பணியாகும். திட்டங்களுக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்து விட்டால் வேறு எந்த துறையும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.
இந்த வாரியம் முழுக்க முழுக்க நிதியமைச்சரின் கீழ் செயல்படும். இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
தங்களது அதிகாரத்தில் ப.சிதம்பரம் தலையிட இந்த வாரியம் வழி வகுக்கும் என்றாலும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மிக நெருக்கமான சக்தி வாய்ந்த அமைச்சர் என்பதால் சிதம்பரத்துக்கு எதிராக பிற துறை அமைச்சர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்த வாரியம் அமைக்கப்படுவது பிடிக்காவிட்டாலும் மனதுக்குள் புலம்பிக் கொண்டு அமைதி காத்து வருகின்றனர்.
இந் நிலையில் சிதம்பரத்தின் இந்தத் திட்டத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படப் போவது ஜெயந்தி நடராஜன் தான். பெரிய அளவிலான எந்தத் திட்டம் என்றாலும் அதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி நிச்சயம் தேவைப்படும். இந்தத் துறையை கையில் வைத்துள்ள ஜெயந்தி, சிதம்பரத்தின் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது. இது பல்வேறு அமைச்சகங்களில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். சுற்றுச் சூழல் அமைச்சர் எடுக்கும் முடிவை இந்த வாரியம் ரத்து செய்தால், நாடாளுமன்றத்தில் இது குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? என்று கேள்வி எழுப்பி, கடுமையான வாசகங்களுடன் இந்தக் கடிதத்தை ஜெயந்தி அனுப்பியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீதே இணையமைச்சர் இத்தகைய கடுமையான வாசகங்களை கொண்ட கடிதத்தை எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயந்திக்கு அமைச்சராக இருக்க பிடிக்கவில்லையோ?!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications