எனது அதிகாரத்தில் ப.சிதம்பரம் எப்படி தலையிடலாம்?: பிரதமரிடம் ஜெயந்தி நடராஜன் புகார்

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீது மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நிதியமைச்சரானது முதல் அடுத்தடுத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்கி வரும் சிதம்பரம் தனது அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பெரிய அளவில் முதலீடுகளை கொண்ட திட்டங்களுக்கு மிக விரைவாக ஒப்புதல் அளிக்கும் வகையில் நிதியமைச்சகத்தின் கீழ் தேசிய முதலீட்டு வாரியம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
பிற அமைச்சகங்களிடமிருந்து திட்டங்களுக்கு மிக விரைவான ஒப்புதலைப் பெறுவது இந்த வாரியத்தின் பணியாகும். திட்டங்களுக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்து விட்டால் வேறு எந்த துறையும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.
இந்த வாரியம் முழுக்க முழுக்க நிதியமைச்சரின் கீழ் செயல்படும். இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
தங்களது அதிகாரத்தில் ப.சிதம்பரம் தலையிட இந்த வாரியம் வழி வகுக்கும் என்றாலும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மிக நெருக்கமான சக்தி வாய்ந்த அமைச்சர் என்பதால் சிதம்பரத்துக்கு எதிராக பிற துறை அமைச்சர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்த வாரியம் அமைக்கப்படுவது பிடிக்காவிட்டாலும் மனதுக்குள் புலம்பிக் கொண்டு அமைதி காத்து வருகின்றனர்.
இந் நிலையில் சிதம்பரத்தின் இந்தத் திட்டத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படப் போவது ஜெயந்தி நடராஜன் தான். பெரிய அளவிலான எந்தத் திட்டம் என்றாலும் அதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி நிச்சயம் தேவைப்படும். இந்தத் துறையை கையில் வைத்துள்ள ஜெயந்தி, சிதம்பரத்தின் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது. இது பல்வேறு அமைச்சகங்களில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். சுற்றுச் சூழல் அமைச்சர் எடுக்கும் முடிவை இந்த வாரியம் ரத்து செய்தால், நாடாளுமன்றத்தில் இது குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? என்று கேள்வி எழுப்பி, கடுமையான வாசகங்களுடன் இந்தக் கடிதத்தை ஜெயந்தி அனுப்பியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீதே இணையமைச்சர் இத்தகைய கடுமையான வாசகங்களை கொண்ட கடிதத்தை எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயந்திக்கு அமைச்சராக இருக்க பிடிக்கவில்லையோ?!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications