போபால் விஷவாயு- யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு அனுப்பிய நோட்டீசுகள் திரும்பின
டெல்லி: 28 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவு தொடர்பாக அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவன தலைமை நிர்வாகி வாரன் ஆண்டர்சனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நோட்டீசுகள் திரும்பி வந்துள்ளன.
இது தொடர்பாக போபால் விஷவாயு கசிவின் விசாரணைக் குழுவினர் கூறியுள்ளதாவது:
1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில மாநிலத் தலைநகர் போபாலில் உலகின் மிக மோசமான விஷவாயு கசிவு ஏற்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக விஷவாயுக் கசிவின் தாக்கத்தால் ஏற்பட்ட நோயால் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியாஅன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு அப்போது 2 நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டும் அமெரிக்கா மற்றும் கிரீன்விச் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட முகவரியில் அப்படி ஒரு நபர் இல்லை என்று அந்த நோட்டீசு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டன. இதனால் மீண்டும் சரியான முகவரிக்கு நோட்டீசை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றனர் அவர்கள்.












Click it and Unblock the Notifications