போலி ஆயுத பேர ஊழல்: பாஜக 'மாஜி' பங்காரு லட்சுமணுக்கு ஜாமீன்
டெல்லி: போலி ஆயுத பேர ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது பாரதீய ஜனதா தலைவராக இருந்த பங்காரு லட்சுமணனிடம் தெகல்கா இணைய தளம் போலியாக ஆயுத பேரம் நடத்தியது. தனது நிருபர்களை இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனத்தினர் என்று கூறி பங்காரு லட்சுமணை சந்திக்க வைத்தது. ராணுவத்துக்கு பைனாகுலர் வாங்க தங்கள் நிறுவனத்தை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய கோரி ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தனர்.
அவர் பணத்தை பெற்றுக் கொண்ட போது ரகசிய கேமராவால் படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டனர். சிடிக்களையும் தெகல்கா வெளியிட்டது. இதனையடுத்து பங்காரு லட்சுமண் ராஜினாமா செய்தார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பங்காரு லட்சுமண் மீது 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீண்டநாட்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பங்காரு லட்சுமணுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பங்காரு லட்சுமணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றம் இன்று ரூ.50 ஆயிரம் சொந்தப் பிணையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பங்காரு லட்சுமணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications