முறைகேடு புகாரில் சல்மான் குர்ஷித்- ராஜினாமா செய்யக் கோரி கெஜ்ரிவால் குழு நாளை முற்றுகைப் போராட்டம்
டெல்லி: தொண்டு நிறுவனம் மூலமாக முறைகேட்டில் ஈடுபட்டதாக சல்மான் குர்ஷித் மீது அர்விந்த் கெஜ்ரிவால் குழு புகார் சுமத்தி இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சல்மான் குர்ஷித் பதவி விலக வலியுறுத்தி நாளை அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை கெஜ்ரிவால் குழு கூறியிருந்த பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தலை உருட்டப்பட்டிருக்கிறது. சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர் தொண்டு நிறுவனம் மூலம் மத்திய அரசின் நிதியை பெற்று மோசடி செய்திருக்கின்றனர். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பெறப்பட்ட நிதியை எந்த ஒரு முகாமும் நடத்தாமலேயே மோசடி செய்திருக்கின்றனர் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இந்த முறைகேடு தொடர்பாக உடனடியாக சல்மான் குர்ஷித் மனைவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
சல்மான் குர்ஷித், அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி நாளை டெல்லியில் உள்ள அவரது வீடு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications