வத்ராவின் சொத்துக்கள்: நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்-மத்திய அரசுக்கு நோட்டீஸ்
லக்னோ: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் சொத்து விவகாரம் இப்பொழுது நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தொட்டிருக்கிறது. வத்ரா மீது சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் எழுப்பியிருக்கும் புகார்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிது.
கட்டுமான நிறுவனமான டி.எல்.எப்., ராபர்ட் வத்ரா மற்றும் ஹரியானா மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் அடுக்கடுக்கான குற்றச்ச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் நுதன் தாகுர் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது.
ரூ50 லட்சத்தில் தொடங்கப்பட்ட வத்ராவின் நிறுவனம் ஒரு சில ஆண்டுகளில் ரூ500 கோடி வருவாய் ஈட்டியது எப்படி என்பதுதான் கெஜ்ரிவால் குழுவின் கேள்வி.











Click it and Unblock the Notifications