தமிழக மீனவர்களை மீண்டும் அடித்து விரட்டியது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 443 பேர் விசைப் படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துள்ளனர். மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்திருக்கின்றனர்.
இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அப்படியே கைவிட்டுவிட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications