பெற்றோர் பேச்சால் முகத்தைத் திருப்பிய காதலி...கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்
திருவாரூர்: காதலியின் கழுத்தை அறுத்த காதலனின் வெறிச்செயலால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை சித்தாங்கரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் வினோதி, பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூண்டி கல்லூரி மாணவரான பிரகாஷ் என்பவரை காதலித்திருக்கிறார் வினோதி. சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கின்றனர். பின்னர் வினோதியின் பெற்றோர் இருவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர் பிரகாஷுடன் பேசுவதையே வினோதி நிறுத்தியிருக்கிறார். இதில் காதலன் பிரகாஷ் கோபமடைந்திருக்கிறான்.
இந்த நிலையில் நேற்று இரவு வினோதியை தனியே ஒரு இடத்துக்கு வருமாறு கூறியிருக்கிறான் பிரகாஷ். அப்போது தகராறு செய்த பிரகாஷ் ஒரு கட்டத்தில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சட்டென வினோதியின் கழுத்தை அறுக்க சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். நீண்ட நேரமாகியும் வினோதினி வீட்டுக்குத் திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியிருக்கின்றனர். அப்போதுதான் வினோதினி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது.
காதலியை கொலை செய்த காதலன் பிரகாஷூம் தம்மை கத்தியால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். ஆனால் படுகாயமடைந்த நிலையில் தற்போது போலீஸ் காவலில் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரபி ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications