அணுஉலை விவகாரம்: உதயகுமார் சவாலை ஏற்றது சரத்குமார் கட்சி!

Subscribe to Oneindia Tamil

Udhayakumar and Sarathkumar
சென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழு தலைவர் சுப.உதயக்குமார் விடுத்துள்ள சவாலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஏற்று கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவங்க கோரியும், வாகனப் பேரணியும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெற 5 லட்சம் புத்தகங்கள் வழங்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அங்கு உற்பத்தி செய்யப்பட உள்ள ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது கோரிக்கையை மத்திய பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் கூறியிருந்தார்.

மேலும், நாட்டு மக்களின் நலன் கருதி போராட்டக் குழுவினரும் அப்பகுதி மக்களும், மாநில மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு, தமிழகம் ஒளி பெற கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதனால் போராட்ட குழுவினர் கடும் கோபம் கொண்டு, சரத்குமார் மீது கடும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடும் விமர்சனம் செய்தனர். இதற்கு அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சுப.உதயகுமார் உருவ பொம்பையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சரத்குமாருக்கு ஒரு அவமரியாதை, அவமானம் என்றால் எந்த தொண்டனும் ஏற்கமாட்டான். எனவே சுப.உதயகுமாரின் சவாலை நாங்கள் ஏற்கிறோம். பொது மேடையை நாங்கே ஏற்படுத்தி தருகிறோம். மக்களை கூட்டுகிறோம். அந்த மேடைக்கு உதயகுமார் வரட்டும். எங்கள் தலைவர் பேச்சை எதிர்கொள்ளட்டும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+