காவிரி விவகாரம்: பிரதமரை மீண்டும் சந்தித்து முறையிடுகிறது கர்நாடகா குழு

ஆலோசனை
காவிரி பாசனப் படுகையில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரி விவகாரம் குறித்து நீர்வளம், சட்ட நிபுணர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.பரமேஸ்வர், நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மூத்த தலைவர் எச்.கே.பாட்டீல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் டி.பி.ஜெயசந்திரா, மத்திய நீர்வளத் துறை முன்னாள் கூடுதல் செயலர் சார், கர்நாடக நீர்ப் பாசனத் துறை முன்னாள் செயலர் ராஜாராய், முன்னாள் தலைமை வழக்குரைஞர்கள் பி.வி.ஆச்சார்யா, ஏ.என்.ஜெயராமன், கன்னட எழுத்தாளர் மருளுசித்தப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரிடம் மீண்டும் முறையீடு
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு தவறிழைத்தது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு பாஜகவின் மோசமான அணுகுமுறையே காரணம். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கர்நாடகத்தின் கள நிலைமையை மீண்டும் ஒருமுறை விவரிப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications