கூடங்குளம் விவகாரம்: அச்சுதானந்தனுக்கு சி.பி.எம். கட்சி மேலிடம் கடும் கண்டனம்
டெல்லி: கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு அக்கட்சியின் மத்திய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்ட் மத்தியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனின் கருத்தை மத்தியக் குழு நிராகரிக்கிறது. கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக செயல்பட்ட அவரை மத்தியக் குழு கண்டிக்கிறது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் மத்தியக் குழு வலியுறுத்தியுள்ளது.
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அணு உலை அவசியமானது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரளாவிலிருந்து இடிந்தகரைக்கு வர முயன்று எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார் அச்சுதானந்தன். இதனால் அவரை மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்திருக்கிறது,












Click it and Unblock the Notifications