நீச்சல்குளத்தில் சிறுவன் மூழ்கிப் பலி .. பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வருக்கு முன் ஜாமீன்!
சென்னை: பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதமான நீச்சல் குளத்தில் மாணவன் ஒருவன் மூழ்கிய சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூட முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ளது பத்மா சேஷத்திரி பாலபவன் உள்ளி. இப்பள்ளியை நிறுவியர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி. இந்தப் பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி மீது வழக்கு இதுவரை பதிவாகவில்லை. அதேசமயம், முதல்வர் ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது சாதாரணப் பிரிவில் முதலில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உடனே ஜாமீனிலும் அனைவரும் வெளியாகி விட்டனர். முன்ஜாமீனும் பெற்றனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது போலீஸாரிடம் விளக்கம் கேட்டது உயர்நீதிமன்றம். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்தனர்.
இதையடுத்து மீண்டும் பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை ஏற்று இருவருக்கும் உடனடியாக முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னை சேலையூர் ஜியோன் பள்ளி விவகாரத்தில் படு வேகமாக செயல்பட்ட போலீஸார், பள்ளி தாளாளர் முதல் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் டிரைவர் வரை அத்தனை பேரையும் ஓவர்நைட்டில் கைது செய்து சிறையிலும் தள்ளி துரிதமாக செயல்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications