நீச்சல்குளத்தில் சிறுவன் மூழ்கிப் பலி .. பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வருக்கு முன் ஜாமீன்!
சென்னை: பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதமான நீச்சல் குளத்தில் மாணவன் ஒருவன் மூழ்கிய சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூட முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ளது பத்மா சேஷத்திரி பாலபவன் உள்ளி. இப்பள்ளியை நிறுவியர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி. இந்தப் பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி மீது வழக்கு இதுவரை பதிவாகவில்லை. அதேசமயம், முதல்வர் ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது சாதாரணப் பிரிவில் முதலில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உடனே ஜாமீனிலும் அனைவரும் வெளியாகி விட்டனர். முன்ஜாமீனும் பெற்றனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது போலீஸாரிடம் விளக்கம் கேட்டது உயர்நீதிமன்றம். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்தனர்.
இதையடுத்து மீண்டும் பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை ஏற்று இருவருக்கும் உடனடியாக முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னை சேலையூர் ஜியோன் பள்ளி விவகாரத்தில் படு வேகமாக செயல்பட்ட போலீஸார், பள்ளி தாளாளர் முதல் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் டிரைவர் வரை அத்தனை பேரையும் ஓவர்நைட்டில் கைது செய்து சிறையிலும் தள்ளி துரிதமாக செயல்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications