பாதியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்- சிலைகள் தெரிகின்றன....

Subscribe to Oneindia Tamil

Mettur dam
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் பாதியாகக் குறைந்ததன் எதிரொலியாக தண்ணீரில் மூழ்கி இருந்த இரட்டை கோபுரம் மற்றும் நந்திசிலை ஆகியன வெளியே தெரிகின்றன.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. கடந்த வாரம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை வினாடிக்கு 1,300 கனஅடி வீதமாகக் குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இது இன்று காலை 6 மணி முதல் இது 16 ஆயிரம் அடியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 29 டி.எம்.சி. நீர் இருக்கிறது. இது 20 நாட்கள் மட்டுமே பாசனத்துக்காக திறக்கப்படும்.

அணையின் நீர்மட்டம் பகுதியாகக் குறைந்ததால் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்திசிலையும் நீர்மட்டத்திற்கு மேலே பொதுமக்களுக்கு காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. இந்த நீர்மட்டம் மேலும் குறையுமேயானால் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நந்தி சிலையை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பகுதிக்கு வருவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+