40 தொகுதிகளையும் வெல்வோம், 'அம்மா'வை பிரதமராக்குவோம்.. எம்.ஜி.ஆர்.மன்றம் சபதம்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றெடுத்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர வைப்போம் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சபதம் செய்துள்ளது.
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் நேற்று நடந்தது. அதில் மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் அசேன் தலைமை தாங்கினார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், இலக்கிய அணி செயலாளரும், சமூகநலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி, மகளிரணி செயலாரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா உள்பட பலர் பேசினார்கள்.
இறுதியில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- எல்லா துறையிலும் திறமையற்ற நிர்வாகம் மூலம் மோசமான ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் உறுதி கொள்வதுடன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, டெல்லி அரியணையில் அமரும் வகையில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற அயராது பாடுபட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் சபதம் ஏற்றுள்ளது.
- சமுதாயத்தின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட இனமான 10 கோடி மலைவாழ் மக்களை இந்த நாடே நினைத்துப் பார்க்கின்ற வகையில், அதிலும் சிறுபான்மையின கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த சங்மாவை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து, மலைவாழ் மக்களும், கிறிஸ்தவ மக்களும், அனைத்து சமூக மக்களும் என் உறவினர்களே என்பதை நாட்டிற்கு உணர்த்திய முதல்வர் ஜெயலலிதாவை அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் வாழ்த்துகிறது.
- அரசின் சிறப்பு திட்டங்களை கிராமம் தோறும் கொண்டு செல்லும் வகையில் தெருமுனை பிரசாரம் செய்யப்படும்.
- தமிழக மக்களை ஏமாற்ற டெசோ மாநாடு நடத்திய கருணாநிதியையும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை நிறுத்தி, காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசினையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினையும் கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications