சச்சினின் வரலாறு: 'ஆடியோ புக்' தயாரித்துள்ள புனே பார்வையற்ற குழந்தைகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தகாரரான இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந் நிலையில் சச்சினின் வாழ்க்கை பயணத்தை குறித்து சஞ்சய் துதானே என்பவர் துருவ்-தாரா என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகளவில் இந்த புத்தகம் அதிக புகழை பெற்றது. இந் நிலையில் துருவ்-தாரா புத்தகத்தை ஆடியோ வடிவிலான புத்தகமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இப்பணியை புனேயை சேர்ந்த பார்வையற்றோருக்கான பள்ளியில் படிக்கும் குழந்தைகள் செய்துள்ளனர். உலக பார்வையற்றோருக்கான தினத்தை முன்னிட்டு, பார்வையற்ற குழந்தைகள் இதனை படைத்துள்ளனர்.
டெக்கான் ஜிம்கானாவில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் இந்த ஆடியோ புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மொத்தம் இரண்டரை மணிநேரம் ஓட கூடிய இந்த ஆடியோ புத்தகத்தில், துருவ்-தாரா புத்தகத்தில் உள்ள அனைத்தும் காரியங்களும் இடம்பெற்றுள்ளது.
மேலும் சர்வதேச அளவிலான சில போட்டிகளில் சச்சின் அடித்த சதம் குறித்த வர்ணனையும் இடம் பெற்றுள்ளது. ஆடியோ புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சியின் போது, பார்வையற்றோருக்கான 2 விக்கெட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் சச்சின் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications