இரு அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

Subscribe to Oneindia Tamil

Alvin Roth and Lloyd Shapley
ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆல்வின் ரோத் (60), லாயிட் ஷேப்லி (89) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இவர்கள் உருவாக்கிய நிலையான ஒதுக்கீடு மற்றும் சந்தை திட்டமிடுதல் நடவடிக்கை' கோட்பாட்டுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக, நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்தல், பல்கலைக்கழகத்துடன் மாணவர்கள் தொடர்பு கொள்ளுதல், இணையதள சர்ச் என்ஜின்களில் விளம்பரத்துக்கான இடத்தை ஏலம் விடுதல் என பல்வேறு துறைகளில் இவர்களின் இந்தக் கோட்பாடு உதவிகரமாக இருக்கும்.

லாயிட் ஷேப்லி கொள்கை வடிவிலும், ஆல்வின் ரோத் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளதாக நோபல் விருதுக் குழு தெரிவித்துள்ளது.

லாயிட் ஷேப்லி ஹார்வர்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் படித்தவர். கணிதம் மற்றும் பொருளியல் துறையில் வல்லவரான லாயிட் ஷேப்லி உருவாக்கிய ஆட்டக் கோட்பாடுக்கு ஷேப்லி மதிப்பீடு (ஷேப்லி வேல்யூ) என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆல்வின் ரோத் கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+