ராகுலுக்கு எதிரான பாலியல் புகார்களை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்-சிக்கலில் முலாயம், அகிலேஷ்!
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதான பாலியல் பலாத்காரம், கடத்தல் ஆகிய புகார்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இப்படிப் புகார்களைக் கூறுமாறு முலாயம் சிங் யாதவும், அகிலேஷ் யாதவும் தூண்டி விட்டார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கும் உத்தரவிட்டுள்ளது.

''கடத்திக் கற்பழித்தார் ராகுல்''
ஒரு பெண்ணை ராகுல் காந்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி அலகாபாத் கோர்ட்டில் கிஷோர் சம்ரிதே என்பவர் உள்ளிட்ட 2 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.

யார் கொடுத்த புகார் இது?
புகார் கொடுத்த சம்ரிதே, முன்னாள் சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ ஆவார். ராகுல் காந்தி, தனது அமேதி தொகுதியில் ஒரு பெண்ணை நைச்சியமாகப் பேசி வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இவர்கள் இருவரும் கூறியிருந்தனர்.

அப்பட்டமான பச்சைப் பொய்- ராகுல் மறுப்பு
இந்தப் புகாரை ராகுல் காந்தி அப்பட்டமாக மறுத்திருந்தார். இது அப்பட்டமான பச்சைப் பொய், எள்ளளவும் உண்மை இல்லை. தனது பெயரை இந்த வழக்கு கெடுத்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் முதல் கொட்டு!
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் இருவருக்கும் தலா பொய் வழக்குப் போட்டதற்காக தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்தது.

முலாயம், அகிலேஷை பிடித்து விசாரியுங்கள்.. உச்ச நீதிமன்றம்
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றம் போனார்கள். அங்கு மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல் மீதான புகாரில் சற்றும் உண்மை இல்லை. இந்தப் புகார்களைத் தெரிவிக்குமாறு முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் தூண்டி விட்டார்களா என்பதை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்பா முலாயமுக்கும், மகன் அகிலேஷுக்கும் சிக்கல்...
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால் முலாயம் சிங் யாதவும், அகிலேஷும் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இருவரும் சேர்ந்து தங்களது கட்சிக்காரரைத் தூண்டி விட்டதாக நிரூபணமானால் இவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம். ஏற்கனவே இருவரும் சொன்னதால்தான் வழக்குப் போட்டேன் என்று சம்ரிதே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

காங்கிரஸ்- சமாஜ்வாடி உறவு என்னாகும்?
ராகுல் காந்தி மீதான பாலியல் பலாத்கார புகார் சர்ச்சையில் முலாயம் சிங்கும், அகிலேஷும் சிக்கியுள்ளதால், அவர்களது சமாஜ்வாடிக் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவு கசந்து முறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications