மோசடியை தவிர்க்க ரயில்வே தட்கல் முன்பதிவு செய்ய இனி தனி விண்ணப்பம்

தற்போது ரயில்வே முன்பதிவு செய்யும் போது, சாதாரண மற்றும் தட்கல் முறைக்கு ஒரே மாதிரியான விண்ணப்ப படிவம் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் புரோக்கர்கள் உள்ளே நுழைந்து மோசடி முறையில் முன்பதிவு செய்து, சீட்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதனால் பயணிகளுக்கு தட்கல் முறையை பயன்படுத்தி பயண சீட் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், தட்கல் முறையில் முன்பதிவு செய்ய விரைவில் தனி விண்ணப்பம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் வி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு(2011) பிப்ரவரி மாதம் முதல் இதுவரை, ரயில்வே முன்பதிவு சேவையை வியாபார நோக்கில் பயன்படுத்திய 5 லட்சத்திற்கு மேலாக ஏஜண்ட்களின் கணக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.யின் மோசடி தடுப்பு குழுவினர் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தட்கல் முன்பதிவு துவங்கும் நேரம் காலை 8 மணிக்கு பதிலாக, தற்போது 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தட்கல் முன்பதிவு முறையில் மோசடிகளை தவிர்க்கும் வகையில், விரைவில் இளஞ்சிவப்பு நிறத்திலான தனி விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை பயணிப்பவரே நேரடியாக வந்து பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தனி விண்ணப்பத்தில் பயணிக்கும் நபரின் முழு முகவரி, தொலைப்பேசி எண், அடையாள அட்டை விபரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் தவறு இருந்தால், ரயில்வே சட்டத்தின் கீழ் அபாராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
62 சிறப்பு ரயில்கள்:
விழா கால பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில், 62 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications