சரக்குக் கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு 25% கூடுதல் வருமானம்
Subscribe to Oneindia Tamil

நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு கட்டணத்தின் மூலம் ரூ. 39 ஆயிரத்து 888.95 கோடி ரயில்வே துறைக்கு வருமானமாக கிடைத்துவிட்டது.
கடந்த அரையாண்டு வருமானத்தைவிட இது 25.43 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சரக்குக் போக்குவரத்து நடப்பாண்டில் 22 மில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ6 ஆயிரத்து 41 கோடி சரக்குக் கட்டணம் மூலமாக கிடைத்திருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரயில்வே துறை, சரக்கு கட்டணங்களின் மூலமாக ரூ. 31 ஆயிரத்து 802.31 கோடி வருமானம் ஈட்டியது. சரல்க்கு கட்டண உயர்வால் நடப்பு ஆண்டில் ரூ. 39 ஆயிரத்து 888.95 கோடி ரயில்வே துறைக்கு வருமானமாக கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications