Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்காரிக்கு எதிராக பேச கெஜ்ரிவால் குழு வற்புறுத்தியது- நாக்பூர் விவசாயி அதிரடி தகவல்

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு எதிராக புகார் கூறுமாறு தம்மை கெஜ்ரிவால் குழு கட்டாயப்படுத்தியதாக நாக்பூர் விவசாயி கடாகே பரபரப்பாக தகவலை வெளியிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் உமிரத் தாலுகாவில் புதிய அணை கட்ட 100 ஏக்கர் நிலத்தை அம்மாநில முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார், பாஜக தலைவர் நிதின்கத்காரிக்கு விதிமுறைகளை மீறி கொடுத்தார் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இதற்கு சாட்சியாக கடாகே என்ற விவசாயியின் பெயரையும் கெஜ்ரிவால் குழு பயன்படுத்தியத்துடன் அவரைக் காணவில்லை என்றும் கூறினர்.

ஆனால் விவசாயி கடாகே இதை முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த நாடகங்கள் அனைத்திற்கும் கெஜ்ரிவாலுடன் இருக்கும் அஞ்சலி தமானியா என்னும் பெண்மணிதான் காரனம். எனது பயன்படுத்தப்படாத நிலத்தை பாசனத்துறை மூலமாக நான் கத்காரிக்கு குத்தகைக்கு அளித்தேன். எனக்கும், கத்காரிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது நிலத்தை திருப்பிக் கேட்டு பாசனத்துறைக்கு நான் விண்ணப்பித்தேன். இதனைக் கேள்விப்பட்ட தமானியா, இதனை அரசியல் ஆக்கிவிட்டார். கத்காரிக்கு எதிராக பேசுமாறு அவர் நிர்பந்தித்தார் என்று அதிரடியாக அம்பலப்படுத்திவிட்டார். ஊடகங்களுக்கு பயந்துதான் நான் ஒளிந்திருந்தேனே தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் விவசாயி கடாகேயின் இந்த புகாரை கெஜ்ரிவால் குழுவைச் சேர்ந்த அஞ்சலி தமானியா மறுத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+