சீனாவுடனான போரில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு முதல் முறையாக அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 1962-ம் ஆண்டு சீனாவுடனான போரின் போது உயிரிழந்த இந்திய ராணுவத்தினருக்கு 50 ஆண்டுகளில் முதல் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா-சீனா போர் முடிவடைந்து 50 ஆண்டுகளாகிறது. இந்தப் போரில் சுமார் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்காக இந்த பொன்விழா ஆண்டில்தான் முதல் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தோணி, இந்தியா எந்த விதமான எதிர்ப்புகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. முன்பிருந்ததை போல் அல்லாமல், பல வகையிலும் இந்திய ராணுவம் முன்னேறியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications