ஓடிப் போன மனைவி.. உயிரை விட்டார் கணவர்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு மனைவி ஓடிப் போனதால் மன வருத்தமடைந்த கணவர் விஷத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (42). லாரி டிரைவரான இவரது மனைவி வெள்ளையம்மாள். 37 வயதாகும் வெள்ளையம்மாளுக்கு மகன், மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது.

சில நாட்களுக்கு முன்பு வெள்ளையம்மாள் காணாமல் போய் விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் மாரியப்பன். அதில் தனது மனைவி வெள்ளையம்மாளை 12ம் தேதி மாலை முதலே காணவில்லை. அவருக்கும், சுப்பையா என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்தது. அவருடன் ஊரை விட்டு ஓடி விட்டார். கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டது போலத் தெரியவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரியப்பன் விஷம் குடித்து விட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

இதுகுறித்து மாரியப்பனின் மகன் சரவணன் போலீஸில் புகார் கொடுத்தார். இதை பதிவு செய்த போலீஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+