மத்திய அரசுக்கு எதிராக பார்லி.யில் தீர்மானம்: திரிணாமுல் காங்கிரஸ் மும்முரம்
கொல்கத்தா: மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பண்டோபாத்யா கூறுகையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக அனைத்து வாய்ப்புகளையும் கவனித்து வருகிறோம். ஆளும் கட்சித் தரப்பிலும் எதிர்க்கட்சி தரப்பிலும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும். அவை எந்த கட்சிகள் என்று கூற முடியாது.
ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆகிய மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து திரிணாமுல்காங்கிரஸ் செயல்படும். இந்தக் கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்துவோம். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. அக்கட்சி மத்திய அரசை நேர்மையாக எதிர்க்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications