கனமழையால் உதகை, கொடைக்கானலுக்கான போக்குவரத்து கடும் பாதிப்பு

மலை ரயில்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குன்னூரிலிருந்து-உதகை செல்லும் நீலகிரி மலை ரயில்சேவை பாதிக்கப்பட்டது. மண் சரிவுகள் அகற்றப்பட்ட பின்பு 5 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. மஞ்சூரில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆதி
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் பிரதான சாலையில் மரம் விழுந்து கிடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. பழனி- கொடைக்கானல் சாலையிலும் நிலச்சரிவு மற்று போக்குவரத்து பாதிப்பு அபாயம் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நிரம்புகள் அணைகள்- ஏரிகள்
கன மழை காரணமாக கடலூரில் உள்ள பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, வாலாஜா ஏரிகள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏரியின் நீர் மட்டம் 44.70 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 6 அடியும், கடனாநதியின் நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாகக் குறைந்துவருகிறது. சனிக்கிழமை விநாடிக்கு 4,303 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழணை மாலை விநாடிக்கு 3,124 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 63.53 அடியாக இருந்தது. பாசனத்துக்கு 1,087 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications