தமிழகத்தில் 3 நாட்களில் 40% கூடுதல் மழை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சராசரி அளவைவிட 40 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது.

கடந்த 18-ந் தேதி மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவடங்களில் கனமழை கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது,

TN gets excess rainfall

கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கமான மழை அளவைவிட 10% கூடுதலாகவும், சனிக்கிழமையன்று இது 29% ஆக உயர்ந்தும் காணப்பட்டது. நேற்றைய மழையைத் தொடர்ந்து நமக்கு கூடுதலாக 40% மழை கிடைத்திருக்கிறது என்கின்ற வானிலை ஆய்வு மைய தகவல்கள்.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தொடர் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் மழை

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நீலகிரியில் 885 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூரில் ஒரே நாளில் 150 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழையின் காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் 27 வீடுகள் இடிந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+