அமெரிக்காவில் மர்ம மனிதனின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி- 4 பேர் படுகாயம்
World
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
ப்ரூக்பீல்ட்: அமெரிக்காவின் விஸ்கான்ஸ் மாகாணம் மில்வாக்கி நகரில் மர்ம நபர் ஒருவர் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். மர்ம மனிதனும் தம்மைத் தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மில்வாக்கி நகரில் உள்ள அழகுநிலையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் 7 பெண்களை அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தம்மைத் தாமே சுட்டுக் கொண்டார். இதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவனும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது,
அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த மர்ம நபரின் மனைவி, தமது கணவர் சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் கூறியதால் கைது செய்யப்பட்டவர். இந்த விரக்தியில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதே மில்வாக்கி நகரில்தான் சீக்கியர்களின் குருத்வாரா ஒன்றிலும் திரையரங்கிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பதால் பீதி அதிகரித்துள்ளது.
Three people were killed and four injured inside a spa on Sunday in a Milwaukee suburb shopping centre in the US state of Wisconsin, when a gunman went on a shooting spree. The suspected attacker, 45-year-old Radcliffe Haughton, was also found dead at the spa. Police say he died due to a self-inflicted gunshot wound. Police are investigating the case as a domestic-related incident. The shooting comes just over three months after the shooting at a Gurudwara in Wisconsin, which left 8 people dead.