'ஸ்பெக்ட்ரம்' ராசா டிவி சேனல் தொடங்குகிறார்?
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திகார் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்துள்ள ஆ.ராசா டிவி சேனல் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக கருணாநிதியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச் செய்தியில் வரணும்
என்னதான் பிரபலமாக இருந்தாலும் தினசரி டிவி செய்தியிலோ, பேப்பரிலோ தலைப்புச்செய்தியாக வரவேண்டும் என்பது சிலருக்கு ஆசை. கடந்த சில ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா.

ராசா புகழ் பரப்பும் சேனல்
இந்தியாவில் உள்ள அனைத்துச் சேனல்களிலும் வட்டம் கட்டி இவரைப் பற்றி செய்தி போட்டாலும் தன்னைப் பற்றி சன்டிவியிலோ, கலைஞர் டிவியிலோ நல்லவிதமாய் செய்தி வரவில்லையே என்ற ஏக்கம் நீண்டநாட்களாய் இருக்கிறது. அதனால் தன்புகழ் பரப்ப தனக்காக ஒரு டிவி சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதியிடம் பேசிய ராசா
தன் தரப்பு நியாயங்களை சொல்ல மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள். ஆனால் கலைஞர் டிவியும், சன் டிவியும் கண்டு கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மக்களிடம் சென்ற பேட்டி
சிறையில் இருந்து வந்த உடன் புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே ராசா பேட்டி கொடுத்தார். அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் சேர்ந்ததாக ராசா கூறியிருக்கிறார் ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும் பேட்டி கேட்கவில்லையாம்.

கருணாநிதி ஒகே சொன்னால் போதும்
கருணாநிதி ஒகே சொன்னால் இப்போதே தனி சேனல் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ராசா தனது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார். சன், கலைஞர் டி.வி.க்களை விட தன்னுடைய சேனல் தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!"என கருணாநிதியிடம் ஆ.ராசா விரிவாக பேசியிருக்கிறாராம்.

சீக்கிரம் செய்திச் சேனல்
ராசாவின் இந்த டீலிங் கருணாநிதிக்கு பிடித்திருப்பதால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார் ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக ராசாவின் சேனல் இருக்குமாம்.












Click it and Unblock the Notifications