நாடார்களை இழிவுபடுத்தி மலையாள நாயர்களை உயர்த்தி எழுதுவதா.. ராமதாஸ் கண்டனம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது.
இது மிகபெரிய வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
அதே பாடத்தின் இன்னொரு பகுதியில், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிந்ததாகவும், மேலாடை அணிவதற்காக நாடார் சமுதாய பெண்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டிக்கிறது. இதுவும் வரலாற்றுத் திரிபாகும்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிந்த போது, அதை எதிர்த்தும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்தும் 1836ம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் அய்யா வைகுந்தர் ஆவார்.
எனவே நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யா வைகுந்தரின் விடுதலைப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் இந்த பாடம் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படியான 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பிழைகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநிலப் பாடத்திட்ட பாடநூல்களில் ஒரு பாடமாக சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications