மும்பையில் ’வீக்கெண்ட்’ நள்ளிரவு கும்மாளம் கூத்து - போலீஸ் பிடியில் தப்பிய 200 பேர்!
மும்பை: மும்பையில் கிளப் ஒன்றில் விடிய விடிய குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தவர்களை கூண்டோடு போலீசார் அள்ளிச் சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக சுமார் 200 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மும்பை காலாகோடா பகுதியில் அதிகாலை நேரத்திலும் காதைப் பிளக்கும் இரைச்சலும் கூச்சலும் போலீசாரை வலிய வரவழைத்தது. அங்கு அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார் சுமார் 200 பேர் வரை சுற்றி வளைத்தனர். அனைவரையும் அங்கிருந்த எம்.ஆர்.ஏ. மார்க் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். கிளப் உரிமையாளர் உட்பட 21 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது விருந்தில் கலந்து கொண்ட இருவர் போலீசாருடன் தகராறு செய்தனர். இந்த தகராறை பயன்படுத்தி அங்கிருந்த 200 பேரும் நைசாக தப்பி சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த டிவி கேமிராமேன்கள் உதவியுடன் தப்பி ஓடியவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications