பெண்கள் தீவிரவாத அமைப்பை உருவாக்குகிறது அல்-கொய்தா இயக்கம்
லண்டன்: தீவிரவாத தாக்குதலின் மூலம் உலக மக்களை பீதிக்குள்ளாக்கிய அல்-கொய்தா இயக்கம், தற்போது பெண்களுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளித்து, பர்தா படை என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி உலக மக்களை பீதிக்குள்ளாக்கிய இயக்கம் அல் கொய்தா. இந்த நிலையில் அமெரிக்கப் படைகள், அல் கொய்தா இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்து, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் களமிறங்கியது.
தற்போது மறைமுகமாக செயல்பட்டு வரும் அல் கொய்தா அமைப்பு, அவ்வப்போது பீதியை கிளப்பும் வீடியோக்களை வெளியிட்டு உலக நாடுகளை மிரட்டி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த பர்தா அணிந்த பெண்கள் பலருக்கும் ஆயுத பயிற்சி அளிப்பது காட்டப்பட்டுள்ளது.
செசன்யா நாட்டில் இயங்கி வரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பெண்களின் முகங்கள் மற்றும் உடல்கள் பர்தா மூலம் மறைக்கப்பட்டுள்ளது. இப்பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து மற்ற நாடுகளில் தாக்குதலை நடத்த அல் கொய்தா தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
வெளிநாட்டு பாதுகாப்பு படைகளுக்கு சந்தேகம் வராத வகையில், மற்ற நாடுகளின் பகுதிகளில் ஊடுருவி செல்ல இந்த பெண்களை பயன்படுத்த உள்ளனர். தீவிரவாத இயக்கங்களில் பெண்கள் இடம் பெறமாட்டார்கள் என்பதால், பாதுகாப்பு படையினருக்கு இவர்களின் மீது சந்தேமும் வராது.
இதன்மூலம் வெளிநாட்டு ராணுவ தளங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த, இனி அல்-கொய்தா பெண்களை கொண்ட குழுவை தான் பயன்படுத்த உள்ளதாம். ஆயுத பயிற்சி அளிக்கப்பட்ட பெண் தீவிரவாதிகளை கொண்டு இந்த படைக்கு, பர்தா படை என்ற பெயரிடப்பட்டுள்ளது.
பர்தா படையை சேர்ந்த பெண்களுக்கு சாதாரண துப்பாக்கிகள், மிஷின்கன், ராக்கெட் லாஞ்சர் மற்றும் நவீன ஆயுதங்களை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications