மரண தண்டனையை குறைக்கக் கோரும் கொலையாளிகள் லிஸ்ட் வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்!

கருணை மனுக்கள் பற்றிய தகவல்களை அனைவரும் அறியும் வகையில் குடியரசுத் தலைவரின் செயலக இணையதளமான http://rashtrapatisachivalaya.gov.in- ல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் நிலுவையில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட 18 பேரின் கருணை மனு தற்போது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யார் யார்?
கருணை மனு விண்ணப்பித்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள் விவரம்:
1. கர்மீத்சிங்: தமது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் பரிசீலித்து 2009-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
2. தர்மபால்: கற்பழிப்பு வழக்கில் பிணையில் வந்த இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் இவர் விண்ணப்பித்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
3. சுரேஷ் , ராம்ஜி: சொத்து தகராறில் உறவினர்கள் 5 பேரை கொலை செய்தவர்கள் இவர்கள். இருவருக்கும் 2001-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இருவரும் விண்ணபித்த கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
4. சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவந்த்ரா: கண்ணிவெடி மூலம் 22 பேரை கொன்ற வழக்கில் 4 பேருக்கும் 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர்களது கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது
5. பிரவீன்குமார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற வழக்கில் இவரது தூக்கு ண்டனையை 2003-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர் இவர் தாக்கல் செய்த கருணை மனுவை பரிசீலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது உள்துறை அமைச்சகம்.
அப்சல் குரு
6. அப்சல் குரு: நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமான அப்சல் குருவின் தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அப்சல் குருவின் கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
7. சாய்பன்னா நிங்கப்பா நதிகர்: மனைவியையும் மகளையும் கொன்ற இவரது தூக்குத் தண்டனையை 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர் தாக்கல் செய்த கருணை மனுவையும் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதியன்று உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது.
8. ஜாபர் அலி: தமது மனைவி மற்றும் 5 மகள்களைக் கொலை செய்த வழக்கில் 2004-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி இவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இவரது கருணை மனு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு நவம்பர் 3-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
9. சோனியா, சஞ்சீவ்: சொத்து தகராறில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்ப்பட வழக்கில் இவர்களுக்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இவர்களது கருணை மனு பரிசீலிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
10. சுந்தர் சிங்: இவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இவரது தூக்கை உறுதி செய்ய இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது கருணை மனு குடியரசுத் தலைவருக்கு வந்து சேர்ந்தது.
11. அத்பீர்: சொத்து தகராறில் வளர்ப்பு தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரை கொன்ற வழக்கில் 2010-ல் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இவரது கருணை மனு கடந்த ஜூன் மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அஜ்மல் கசாப்
12. அஜ்மல் கசாப்: மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே பாகிஸ்தான் தீவிரவாதி. 166 பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவன். இந்தியாவின் மீது போர் தொடுத்த வழக்கில் கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் கசாப்பின் தூக்கை உறுதி செய்தது. இவனது கருணை மனு கடந்த 16-ந் தேதிதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications