Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரண தண்டனையை குறைக்கக் கோரும் கொலையாளிகள் லிஸ்ட் வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்!

Subscribe to Oneindia Tamil

Afzal Guru and Ajmal Kasab
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அஜ்மல் கசாப் உட்பட 18 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதாக அவரது செயலகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

கருணை மனுக்கள் பற்றிய தகவல்களை அனைவரும் அறியும் வகையில் குடியரசுத் தலைவரின் செயலக இணையதளமான http://rashtrapatisachivalaya.gov.in- ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் நிலுவையில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட 18 பேரின் கருணை மனு தற்போது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யார் யார்?

கருணை மனு விண்ணப்பித்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள் விவரம்:

1. கர்மீத்சிங்: தமது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் பரிசீலித்து 2009-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

2. தர்மபால்: கற்பழிப்பு வழக்கில் பிணையில் வந்த இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் இவர் விண்ணப்பித்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.

3. சுரேஷ் , ராம்ஜி: சொத்து தகராறில் உறவினர்கள் 5 பேரை கொலை செய்தவர்கள் இவர்கள். இருவருக்கும் 2001-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இருவரும் விண்ணபித்த கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.

4. சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவந்த்ரா: கண்ணிவெடி மூலம் 22 பேரை கொன்ற வழக்கில் 4 பேருக்கும் 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர்களது கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது

5. பிரவீன்குமார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற வழக்கில் இவரது தூக்கு ண்டனையை 2003-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர் இவர் தாக்கல் செய்த கருணை மனுவை பரிசீலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது உள்துறை அமைச்சகம்.

அப்சல் குரு

6. அப்சல் குரு: நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமான அப்சல் குருவின் தூக்கு தண்டனையை 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அப்சல் குருவின் கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.

7. சாய்பன்னா நிங்கப்பா நதிகர்: மனைவியையும் மகளையும் கொன்ற இவரது தூக்குத் தண்டனையை 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவர் தாக்கல் செய்த கருணை மனுவையும் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதியன்று உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது.

8. ஜாபர் அலி: தமது மனைவி மற்றும் 5 மகள்களைக் கொலை செய்த வழக்கில் 2004-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி இவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இவரது கருணை மனு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு நவம்பர் 3-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

9. சோனியா, சஞ்சீவ்: சொத்து தகராறில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்ப்பட வழக்கில் இவர்களுக்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இவர்களது கருணை மனு பரிசீலிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

10. சுந்தர் சிங்: இவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இவரது தூக்கை உறுதி செய்ய இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது கருணை மனு குடியரசுத் தலைவருக்கு வந்து சேர்ந்தது.

11. அத்பீர்: சொத்து தகராறில் வளர்ப்பு தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரை கொன்ற வழக்கில் 2010-ல் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இவரது கருணை மனு கடந்த ஜூன் மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அஜ்மல் கசாப்

12. அஜ்மல் கசாப்: மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே பாகிஸ்தான் தீவிரவாதி. 166 பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவன். இந்தியாவின் மீது போர் தொடுத்த வழக்கில் கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் கசாப்பின் தூக்கை உறுதி செய்தது. இவனது கருணை மனு கடந்த 16-ந் தேதிதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+