கண்காணிப்புக் குழு பரிந்துரையை அமல்படுத்துக: கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் 'அட்வைஸ்'
டெல்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. காவிரியில் கர்நாடகம், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி வீதம், 24 நாட்களுக்கான 48 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை.
இன்றைய விசாரணையின் போது, காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை கர்நாடக அரசு முறையான அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications