ஆதீன மடத்தை அரசு ஏற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை அருணகிரிநாதர் புதிய மனு

Subscribe to Oneindia Tamil

Madurai adheenam
மதுரை: மதுரை ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரிய வழக்கிற்கு தடை விதிக்க கோரி அருணகிரிநாதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கு என்ன?

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில், மதுரை ஆதீனம், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா ஆகியோர் சார்பில் ஆதீன மடத்தின் சொத்துக்களை பராமரிப்பதற்காக மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. மடத்தின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தொடர்பாக அறநிலையத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. ஆதீனத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் அருணகிரிநாதரை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். மேலும் மதுரை ஆதீன மடத்தை இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இம்மனுவை நீதிபதி முருகையா நேற்று விசாரணைக்கு எடுத்த போது, மதுரை ஆதீனம் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் இம் மனுவுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க வருகிற 9-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+