நிலம் புயல்-அலுவலகம் சென்றோர் உடனே வீடு திரும்ப சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை பெருநகரம் பெரும் புயலை சந்தித்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் சென்னை நோக்கி வரும் புயல் திசைமாறி ஆந்திரா மற்றும் ஒடிஷா நோக்கி நகர்ந்துவிடும். ஆனால் இம்முறை சென்னைக்கு தெற்கே தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சென்னைவாசிகள் பீதிக்குள்ளாகினர்.
சென்னைக்கு மிக அருகே தென்பகுதியில் நிலம் புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னையும் பாதிப்படைய கூடும். வழக்கம் போல இன்றி இம்முறை கனமழை இல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழை பெய்தால் காற்றின் வேகம் குறைந்திருக்கும். புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சென்னை மெரினா கடற்கரை பெரும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற பீதி ஏற்பட்டது.
இதனால் கடற்கரை சாலையில் உள்ள பெரு மரங்களும் மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்துவிடும் என்ற அச்சம் நிலவியது. மேலும் புயலினால் கடலோர குடிசைகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க 282 மாநகராட்சி பள்ளிகள் தயார்ப்படுத்தப்பட்டன.
இதேபோல் 52 சமுதாயக் கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்கும் விதமாக மின்சார வாரியத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
பொதுமக்கள் புகார்களை உடனடியாக மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக 1913 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வேண்டுகோள்:
இந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றும் மழையும் தொடர்ந்து நீடித்ததால், புயல் கரையை கடக்கும் நேரத்திற்கு முன்பாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற அனைவரும் உடனே வீடுகளுக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது. சென்னை மாநகர ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications