நகராட்சிக் கூட்டத்திற்கு கொசுவலையுடன் வந்த கவுன்சிலர்கள்.. பறித்துக் கிழித்த அதிமுகவினர்
புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சியைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி கவுன்சிலர்கள் நகராட்சிக் கூட்டத்திற்கு கொசு வலையுடன் வந்தனர். இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் கொசுவலையைப் பறித்துக் கிழிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் நகரப் பகுதிகளில் கொசுக்களின் தொல்லையால் டெங்கு போன்ற நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நகரில் சாக்கடைகள் நிறைந்து ஓடுகிறது. அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்களை கடித்து டெங்கு காய்ச்சலை உருவாக்கி உள்ளது. எனவே நகரை சுத்தமாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கவுன்சிலர்களின் கோரிக்கை.
ஆனால் கொசுவை ஒழிக்க அதிமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டு.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக மற்றும் கவுன்சிலர்கள் கொசு வலையுடன் நகர்மன்ற கூட்டத்திற்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் கொசுவலைகளை பிடுங்க முயன்றனர். இதனால் நகர்மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக நிர்வாகத்தைக் கண்டித்து நகர்மன்றத்தில் நடுவில் அமர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழக்கமிட்டத்தால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு உருவானது.












Click it and Unblock the Notifications