ராமநாதபுரத்தில் கல்லூரி பஸ்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- டாக்டர் கார் மீது தாக்குதல் -பதட்டம்
ராமநாதபுரம்: தேவர் குரு பூஜை விழாவிற்கு சென்ற 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக, ராமநாதபுரத்தில் கல்லூரி பஸ்கள் மீது பெட்ரோல் குண்டு வீச மர்மநபர்கள் முயன்றனர். மேலும் தனியார் மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த டாக்டர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கடந்த 30ம் தேதி தேவர் குரு பூஜைக்கு சென்ற சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேரும் இறந்தனர். இதை கண்டித்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.
இதனால் அப்பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டமே குறைவாக இருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள சந்தோஷ் தியேட்டரை அடுத்த பகுதியில் தனியார் என்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான 13 பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றிரவு இப்பகுதிக்கு மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பஸ்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, மோட்டர் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.
ஆனால் மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு பஸ்களின் மீது விழாமல், அப்பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது விழுந்து வெடித்தது. இதனால் பஸ்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தப்பியது.
அதேபோல ராமநாதபுரத்தில் உள்ள அக்ரகார சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டாக்டர் ஒருவரின் கார் மீது, மர்மநபர்கள் தாக்கினர். இதில் காரின் கண்ணாடிகள் நொறுக்கியது. நேற்று இரவு முழுவதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் நீடித்தது.
ஆனால் இன்று காலையில் பதட்டம் ஓய்ந்தது. இதனால் காலை முதல் பஸ்கள் இயங்கப்பட்டன. ஆனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பஸ்களிலும் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கும், திருச்சி, பட்டுக்கோட்டை, ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பதட்டம் மிகுந்த பகுதிகளாக கருதப்பட்ட பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
பரமக்குடியில் முக்குலத்தோர் சங்கங்கள் அறிவித்த பந்த் காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. பள்ளிகள், கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. 144 தடை உத்தரவு இருப்பதால், மக்களை கூடி நின்று பேச வேண்டாம் என்று போலீசார் எச்சரித்தனர். பரமக்குடி, கமுதி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்புவனம் பகுதியில் ஆட்டோக்கள் மட்டுமே ஓடின. ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications