ஊழல் புரிந்திருந்தால் யாராக (கட்காரி) இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.
சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்குளாவோர் மீதான புகார் நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்துள்ளது.
பாஜக தலைவர் நிதின் கட்காரி ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாதுகாத்து வருகிறது என்று கூறப்படும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இத்தகைய ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியக் குழுக் கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணை செயலாளர் தத்தாரேயா கூறுகையில், ஊழலையும் முறைகேட்டையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். தனிப்பட்ட நபர் மீதோ அல்லது கட்சிகள் மீதோ குற்றம்சாட்டப்பட்டால் அந்த குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்,
கெஜ்ரிவால் கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும்தான் பதிலளிக்க வேண்டும். யாராவது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்வதுடன் சட்டப்படி தண்டிக்கப்படவும் வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியக் குழுக் கூட்டத்தில் பொதுவாக ஊழல் விவகாரங்கள் பற்றி விவாதிப்போம். எந்த ஒரு தனிப்பட்ட நபர் மீதான புகார் குறித்தும் விவாதிக்கமாட்டோம். பாஜக தலைவர் பொறுப்பில் யார் உட்கார வேண்டும்? வேண்டாம் என்பதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார் அவர்.
கட்காரி புகார் குறித்து பாரிக்கர்
இதனிடையே பாஜக மூத்த தலைவரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் அளித்த பேட்டி ஒன்றில், சில நபர்களின் சில நடவடிக்கைகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் கட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது கட்காரியாக இருந்தாலும், வத்ராவாக இருந்தாலும், ஏன் பிரதமராக இருந்தாலும் தங்கள் கட்சிக்கு, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் பதில் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications