For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலம் புயலால் தரை தட்டிய கப்பல்- மீட்க வருகிறது மும்பை சிறப்பு குழு: ஜி.கே.வாசன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தரை தட்டி நிற்கும் சரக்கு கப்பலை மீட்க மும்பையில் இருந்து சிறப்பு குழு வர உள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

நிலம் புயலால் தரை தட்டிய கப்பலை அமைச்சர் வாசன், அதிகாரிகளுடன் நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரை தட்டிய கப்பலை மீட்க சிறப்பு கப்பல் மீட்பு குழு மும்பையில் இருந்து வர உள்ளது. கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் அடையாறில் சிகிச்சை பெற்று வரும் கப்பல் ஊழியர்களையும் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிங்கப்பூர் குழு

இதனிடையே தரை தட்டிய கப்பலை மீட்பது குறித்து சிங்கப்பூரில் இருந்து 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய இருக்கிறது. முதல் கட்டமாக 3 வல்லுநர்கள் நேற்று மாலை கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் கப்பலை அவர்கள் ஆய்வு செய்தனர்.

English summary
Union Minister of Shipping GK Vasan said, a special team from Mumbai to rescue the grounded ship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X