தரை தட்டிய கப்பலில் இருந்து உயிர்காக்க குதித்த 5-வது ஊழியர் உடல் கரை ஒதுங்கியது
சென்னை: நிலம் புயலின் போது சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய சரக்குக் கப்பலில் இருந்து குதித்தவர்களில் 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது.
தரை தட்டிய கப்பல்
மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு சொந்தமானது பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் சென்னையில் சரக்கை இறக்கிவிட்டு மும்பை செல்ல முடியாமல் சென்னை கடற்பரப்பில் நின்று கொண்டிருந்தது. தங்களுக்கான எரிபொருள் மற்றும் உணவு வழங்க கப்பலில் இருந்த 37 பணியாளர்கள் பலமுறை துறைமுக, காவல்துறையினருக்கு கோரிக்கைவிடுத்தும் யாரும் கேட்பாரில்லை. ஏஜெண்டும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் வங்கக் கடலை வலம்வந்த நிலம் புயல் இந்த சரக்குக் கப்பலையும் பதம் பார்த்தது.

கரை ஒதுங்கிய சடலங்கள்
இந்நிலையில் சென்னை கடற்பரப்பில் காணாமல் போன் ஐந்து ஊழியர்களின் சடலங்களும் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கத் தொடங்கின. அவை ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தரை தட்டிய கப்பில் இருந்து உயிர் தப்பிக்க குதித்த 5 பேருமே பலியாகிப் போய்விட்டனர்.












Click it and Unblock the Notifications