உமாசந்திரன் எழுதிய நூல் எது... டிஎன்பிஎஸ்சி தேர்வில் இப்படியும் கேள்வி!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த டிஎன்பிஎஸ்டி குரூப் 2 தேர்வில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்ததாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் 2 தேர்வு நடந்தது. ஆனால் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆகி விட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் இன்று நடந்தது. கடந்த தேர்வை எழுதியவர்கள் மட்டும் இதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்வில் ஒரு சுவாரஸ்ய கேள்வி இடம் பெற்றிருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குறிப்பிட்டனர். அதாவது டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த கேள்விதான் அது.
அதற்கு முன்பு நடராஜின் தந்தை குறித்த தகவலைப் பார்ப்போம்... நடராஜின் தந்தை பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். இவர் நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். உமா சந்திரன் என்ற புனை பெயரில் எழுதி வந்தார். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். இந்தக் கதையைத்தான் இயக்குநர் மகேந்திரன் பெற்று அதை முள்ளும் மலரும் என்ற பெயரிலேயே திரைப்படமாக்கினார். ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடித்த இப்படம் பெரும் ஹிட் ஆனது.
இப்போது டிஎன்பிஎஸ்சி கேள்விக்கு வருவோம்... பொருத்து என்ற பகுதியில், எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய நூல் என்று கேட்கப்பட்டு அதற்குரிய பதில்கள் தரப்பட்டிருந்தன. அதில் முள்ளும் மலரும் என்ற விடையும் இருந்தாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications