பாஜக தலைவர் கட்காரியின் தலைமைக்கு எதிர்ப்பு- கட்சிப் பதவியிலிருந்து ஜெத்மலானி மகன் ராஜினாமா!

பாஜக தலைவர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்று சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குழு அண்மையில் பற்ற வைத்திருந்தது. இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் விவேகானந்தரையும் தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் கட்காரி.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து தாம் ராஜினாமா செய்வதாக மூத்த பாஜக தலைவர் ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி அறிவித்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் ‘ கட்காரி கட்சித் தலைவராக இருக்கும் வரை தேசிய செயற்குழுவில் இருக்க முடியாது என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்!
பாஜக தலைவர் பதவியில் இருந்து கட்காரி விலகியாக வேண்டும் என்று ஏற்கெனவே ராம்ஜெத்மலானி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜகவுக்குள்ளேயே கட்காரிக்கு எதிரான கலகக் குரல்கள் வலிமை பெற்று வருகின்றன என்பதையே மகேஷ் ஜெத்மலானியின் ராஜினாமா சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications