ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நீதிமன்ற ஊழியர்களுக்கு இன்னும் தரப்படும் 'ரிஸ்க் அலவன்ஸ்'!

சென்னையில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம்-1ல் தான் 21 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கொலை வழக்கு விசாரணை தொடங்கியது. 13 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், விசாரணை காலத்தில் இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் ஆபத்துகள் கருதி இதில் பணியாற்றியவர்களுக்கு ஊதியத்துடன் கூடுதலாக 30 சதவீதம் 'ரிஸ்க் அலவன்ஸ்' தொகை வழங்கப்பட்டு வந்தது.
இப்போது விசாரணை எல்லாம் முடிந்து வழக்கே முடிந்துவிட்டாலும் இந்த 'ரிஸ்க் அலவன்ஸ்' மட்டும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.
இதில் பணியாற்றிய சுமார் 12 ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் தங்களது பென்சன் தொகையுடன் இந்த 30 சதவீத கூடுதல் தொகையை பெற்று வருகின்றனர்.
இந்த நீதிமன்றத்தில் ஒரே ஒரு நாள் பணியாற்றியிருந்தாலும் கூட 'ரிஸ்க் அலவன்ஸ்' கிடைக்கும் என்பதால், இதில் பணியாற்ற பெரும் போட்டியே நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications