தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கக் கோரிய வழக்கு – உச்சநீதிமன்றத்தில் 7ம் தேதி விசாரணை
டெல்லி: டெல்லி அரசு ஒப்படைத்துள்ள கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக் கோரி இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. மனுவில், டெல்லி அரசு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 721 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை மத்திய தொகுப்புக்கு அளிக்க உள்ளதால், அந்த மின்சாரத்தை, மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இதுதவிர, மத்திய மின் தொகுப்பில் இருந்து தெற்கு மின் தொகுப்பில்இணைப்பதற்கு போதிய மின் வழித்தடங்கள் இல்லாததால், அதற்கான வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த இன்னொரு மனுவில், டெல்லி வழங்கும் கூடுதல் மின்சாரத்தை வேறு எந்த மாநிலத்துக்கும் வழங்காமல், தமிழகத்துக்கு மட்டும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மனுவை, அவசர நிலையை கருத்தில் கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 7ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications