புது கட்சி துவங்குவதில் இருந்து ஜகா வாங்க மாட்டேன்: எதியூரப்பா

பாஜக நடவடிக்கையால் அதிருப்தியடைந்து புது கட்சி துவங்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை சமாதானம் செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி பெங்களூர் வந்தார். அவர் எதியூரப்பாவை சந்தித்து எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம் என்று சமாதானம் செய்தார். அப்போது எதியூரப்பா, நிதின் கட்காரியை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக்கவில்லை என்றால் தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக நிபந்தனை விதித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக தன்னை நியமிப்பதுடன், அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்குமாறும் நிபந்தனைகள் விதித்தார்.
இந்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால் தான் பாஜகவில் இருந்து விலகுவது நிச்சயம் என்று கூறினார். ஆனால் பாஜக அவரது நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டிசம்பர் 9ம் தேதி கட்சி துவங்கும் எனது திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. பிறர் வருகிறார்களா என்பதை எல்லாம் பார்க்காமல் அறிவித்தது போன்று கட்சி துவங்குவேன். முடிவை வாபஸ் வாங்கும் கேள்விக்கே இடமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications