உறுப்பை அறுத்து, தலையை நசுக்கி வாலிபர் கொடூரக் கொலை
சென்னை: சென்னை அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டுள்ளது, தலையும் நசுக்கப்பட்டுள்ளது. பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி பின்னால் உள்ள காலி மைதானத்தில், இன்று அதிகாலை மலஜலம் கழிக்கச் சென்றவர்கள் அங்கு இளைஞரின் பிணம் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது.
சங்கர்நகர் போலீஸார் விரைந்து வந்தனர் பிணத்தைக் கைப்பற்றினர். நடுத்தர வயதைக் கடந்த அந்த நபரின் உடல் கோரமாகக் கிடந்தது. அவரது தலையை கல்லால் நசுக்கிக் கொன்றுள்ளனர். மேலும் அவரது ஆணுறுப்பும் அறுக்கப்பட்டிருந்தது.
அந்த நபருக்கு அருகே மது பாட்டில், செருப்பு உள்ளிட்டவை கிடந்தன. ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தலையில் அடித்துக் கொன்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
பெண் விவகாரம் காரணமாக இவர்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications