ரூ5.14 கோடி வரி கட்ட சொல்லி ராம்தேவ் அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவின் அறக்கட்டளை ரூ5.14 கோடி சேவை வரி கட்டக் கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யோகா முகாம்கள், ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் அறக்கட்டளைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டாமல் தவிர்த்து வருகிறார் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று பேசிவருகிறார் ராம்தேவ்.
மேலும் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட யோகா முகாம்களுக்காக ரூ5.14 கோடி சேவை வரி பாக்கி வைத்திருக்கிறார் ராம்தேவ். இது 2007 -2008 மற்றும் 2011-2012 காலகட்டத்தின்போது நடந்த முகாம்களின் போது கட்டப்பட வேண்டிய சேவை வரியாகும். இதனை உடனடியாக கட்ட வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களும் அந்த நோட்டீசில் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் யோக குரு பாபா ராம்தேவின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிதி விலக்கை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்ற செய்தியும் நோட்டீசில் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ உதவிகளுக்காக அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நடவடிக்கைகளுக்காக வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்கிறார் ராம்தேவின் செய்தித் தொடர்பாளார்.












Click it and Unblock the Notifications