மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக்கொண்டனர் அதிகாரிகள்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தங்களது நாட்டு மண்ணில் பயிற்சி பெற்றதை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி செளத்ரி ஹபிபுர் ரஹ்மான் முன்பு ஆஜரான அதிகாரிகள், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற ஜஹுயுர் ரஹ்மான், லக்வி ஆகியோர் கராச்சி, ம்ன்செஹ்ரா, தட்டா மற்றும் முசாஃபர்பாத் ஆகிய இடங்களில் லஷகர் இ தொய்பா முகாம்களில் பயிற்சி பெற்றனர் என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த லக்வி, லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கராச்சி அருகே கடாப் நகர் கடற்பரப்பிலும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பயிற்சி பெற்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளன.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாதிகள் தங்களது மண்ணில்தான் பயிற்சி பெற்றனர் என்பதை பாகிஸ்தான் தற்போதுதான் ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications