நிதி கோரி பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு டென்ட் அடித்து மேயர் உண்ணாவிரதப் போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மையான நகரங்களில் ஒன்று செவ்ரான். அதன் மேயர் ஸ்டீபன் காடிக்னான். வறுமை, வேலையின்மையுடன் போராடும் தனது நகருக்கு நிதி கேட்டு அவர் பிரான்ஸ் அரசை பலமுறை அணுகியும் பலனில்லை. இதனால் கடுப்பான அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முன்பு ஒரு கூடாரத்தை அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் நாளை வரை உண்ணாவிரதத்தை தொடர முடிவு செய்துள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செவ்ரான் மக்கள் பாரீஸ் வந்து அவரை சந்தி்த்து வருகிறார்கள்.
செவ்ரானில் செயல்பட்டு வந்த கோடக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 1980 மற்றும் 90களில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் செவ்ரானில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. போதிய நிதி இல்லாததால் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
இது குறித்து ஸ்டீபன் கூறுகையில்,
நாங்கள் மிகவும் மோசமான நெருக்கடியான நிலைமையில் உள்ளோம். நிதி கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications