நோ சம்பளம்: 'கருப்பு' தீபாவளி கொண்டாடிய கிங்பிஷர் ஏர்லைனஸ் ஊழியர்கள்
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு மே மாத சம்பளமே இன்னும் கிடைக்காததால் அவர்கள் இந்த தீபாவளியை துக்க தீபாவளியாக அனுசரித்தனர்.
பல்வேறு நிதிப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு பல மாத சம்பள பாக்கி வைத்துள்ளது. ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து தீபாவளிக்குள் 3 மாத சம்பள பாக்கியை கொடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் சுமார் 3,000 பேருக்கு கடந்த மே மாத சம்பளமே இன்னும் வழங்கப்படவில்லை.
சம்பளம் வந்துவிடும் தீபத் திருநாளான தீபாவளியை கொண்டாடலாம் என்று எதிர்பார்த்த ஊழியர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நிர்வாகம் உறுதியளித்ததைப் போன்று சம்பளம் வழங்காததால் கிங்பிஷர் ஊழியர்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளியாகிவிட்டது.
இது குறித்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ஜினியர் ஒருவர் கூறுகையில்,
தீபாவளிக்கு முன்பு சம்பளம் வந்துவிடும் தீபத் திருநாளை நாமும் சந்தோஷமாகக் கொண்டாடலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சம்பளமே வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications