ஒரு தம்பதி.. 2 லட்சம் பேர்.. ரூ. 493 கோடி 'ஸ்வாஹா'.. 94 வங்கி கணக்குகள், 13 போலி பெயர்கள்!!

முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 2 லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகளுக்கு வட்டியும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இந்த நிறுவனம் மீது 14,303 புகார்கள் குவியவே, அதன் அதிபரான உல்லாஸ் பிரபாகர் கைரே (33), அவரது மனைவி ரக்ஷா உர்ஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். கிட்டத்தட்ட ஓராண்டு தேடலுக்குப் பின் அவர்கள் சமீபத்தில் மகாராஷ்டிராவில் வைத்து சிக்கினர். இவர்களை டெல்லி போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தில் 2,05,062 முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் ரூ. 493 கோடி வரை ஸ்டாக் குரு நிறுவனம் வசூலித்துள்ளது.
இவர்களை போலீசார் தேட ஆரம்பித்ததும் மெராதாபாத், டெஹ்ராடூன், அல்வார், நாக்பூர், கோவா, ரத்னகிரி என இடம் மாறி பல்வேறு போலி பெயர்களில் தங்களது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
2010ம் ஆண்டில் இவர்கள் ஸ்டாக் குரு நிறுவனத்தை தொடங்கியதே கூட இவர்களது போலி பெயர்களில் தான் என்பதும் தெரியவந்துள்ளது. முதலீடுகளுக்கு ஒரே மாதத்தில் 20 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளனர்.
நாடு முழுவதும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். ஏராளமான ஏஜெண்டுகளை நியமித்து பணத்தை வசூல் செய்துள்ளனர்.
ரூ. 493 கோடி தேறியதும் ஒரு நாள் திடீரென நிறுவனத்தையே மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு 20 வங்கிகளில் 94 கணக்குகள் உள்ளன. இவை 13 பெயர்களில் உள்ளன. நாடு முழுவதும் 12 இடங்களில் வீடுகளும் 12 உயர் ரக கார்களும் உள்ளன.
இந்த சொத்துக்களை முடக்கும் வேலைகளை துவங்கியுள்ளன.
இவர்கள் வெளிநாடுகளிலும் முதலீடு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது. கூடவே Serious Fraud Investigation Office அமைப்பும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications