ஐ.நா. குழுவினரை நாங்கள் மிரட்டவில்ல... மறுக்கிறது இலங்கை அரசு
கொழும்பு: இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தோரை தாங்கள் மிரட்டவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே.,
இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற போது ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுவது சரியல்ல. அக் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகாத போது, அதில் இருந்து கசிந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றி கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுவது முட்டாள்தனமானது. தூதர்களை எப்படி நாங்கள் மிரட்ட முடியும்? அப்படி எதுவும் நடக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்த போது, போர் நடைபெற்ற பகுதியில் இருந்து வெளியேறுமாறு ஐ.நா. குழுவினரை இலங்கை அரசு வற்புறுத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மைக்கு மாறானது ஆகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications